மானிப்பாய் கோவில்பற்று முன்பள்ளியில் சத்துணவுத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

மானிப்பாய்ப் பிரதேச சபைக்குபட்ட பகுதிகளில் முன்பள்ளிச் சிறார்களுக்கு 65 லட்ச நிதி ஒதுக்கீடு மூலம் சத்துணவு வழங்கும் திட்டம் மானிப்பாய்ப் பிரதேச சபையால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாக மானிப்பாய் கோவில்பற்று முன்பள்ளியில் பயிலும் 43 சிறார்களுக்கான சத்துணவுத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை (04.08.2025) காலை மேற்படி முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் மானிப்பாய்ப் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன், உப தவிசாளர் பேரின்பநாயகம் சுபாகர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்களான உஷாந்தன், ஞானரூபன், வீரசிங்கம், தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.