நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலத்தில் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வரும் ஆன்மீக அருளுரை இன்று வியாழக்கிழமை (07.08.2025) பத்தாவது நாளாக இடம்பெறவுள்ளது.
இன்று இரவு-08 மணி முதல் இரவு-08.30 மணி வரை நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் கலந்து கொண்டு "உபதேசம் உணர்த்தியவா" எனும் தலைப்பில் ஆன்மீக அருளுரை ஆற்றுவார்.