கார்த்திகைப் பூச் சப்பரத்தில் நல்லூர்க் கந்தன் பவனி

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் விசுவாவசு வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் பத்தொன்பதாவது நாள் மாலைத் திருவிழாவான கார்த்திகை உற்சவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (16.08.2025) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

மாலை-04.45 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வள்ளி- தெய்வயானை நாயகியர் சமேதரராய் முத்துக்குமார சுவாமி உள்வீதியில் உலா வந்து அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய பூச் சப்பரத்தில் நல்லூர்க் கந்தப் பெருமான் வெளிவீதியில் பவனி வந்தார்.