பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (18.08.2025) ஆரம்பமாகவுள்ளது.
2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை இந்த மாதம்-07 ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந் நிலையில் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (18.08.2025) ஆரம்பமாகுமெனக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும்- 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.