தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் கலை, இலக்கியப் பேராளுமைகளுடன் நிகழ்த்திய நேர்காணல்களின் தொகுப்பான வேர் முகங்கள் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14.09.2025) மாலை-03 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறைத் தலைவர் கலாநிதி.தி.செல்வமனோகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் எங்கட புத்தகங்கள் இல்லத்தின் நிறுவுனர் கு.வசீகரன் நூல் வெளியீட்டுரையை ஆற்றுவார். ஊடகவியலாளர் செல்வி.சர்மிலா வினோதினி, சமூக ஆய்வாளர் தெ.மதுசூதனன் ஆகியோர் கருத்துரைகளை ஆற்றுவர்.