வாழ்க்கை ஒரு அரிய வரம்: மதித்துக் காப்போம்!

தற்கொலை உலகளவில் மிகப்பெரிய பொதுச் சுகாதாரச் சவாலாக உள்ளது. தற்கொலைத் தடுப்பு என்பது மருத்துவர், உளவியல் நிபுணர் மட்டுமல்லாது குடும்பம், சமூக அமைப்புக்கள், அரசு அனைத்தும் இணைந்து செய்ய வேண்டிய பணியாகும். பாரம்பரியச் சிகிச்சையும், நவீன உளவியல் முறைகளும் இணைந்து செயல்பட்டால் எங்கள் சமூகத்திற்கு ஏற்ற பயனுள்ள முழுமையான தற்கொலைத் தடுப்பு மாதிரி உருவாகும். வாழ்க்கை ஒரு அரிய வரம். அதை மதித்துக் காப்போம் என அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.