யாழ். மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கம் நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (19.09.2025) காலை-09 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.