ஞானச்சுடர் ஆவணி மாத வெளியீட்டு நிகழ்வு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஞானச்சுடர் சஞ்சிகையின் 332 ஆவது ஆவணி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு நாளை  வெள்ளிக்கிழமை (19.09.2025) முற்பகல்-10.30 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.  

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் சைவப்புலவர் பொன்.சந்திரவேல் மலரின் வெளியீட்டுரையையும், ஓய்வுநிலை அதிபர் இரா.ஶ்ரீநடராசா மலரின் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்தவுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்படும்.