அரச சேவையில் இணையும் பல்லாயிரக்கணக்கானோர்! 

அரச சேவையில் 70 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அனைத்துச் சுகாதாரத்துறைப் பிரதானிகள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் சுகாதார சேவை உதவியாளர்களாக 1900 பேரை இணைத்துக் கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.