ஞானச்சுடர் சஞ்சிகையின் ஐப்பசி மாத வெளியீடு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் சஞ்சிகையின் ஐப்பசி மாத 334 ஆவது இதழ் வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (31.10.2025) முற்பகல்-10.30 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் சமாதான நீதவான் ஐ.கோ.சந்திரசேகரம் மலரின் வெளியீட்டுரையையும், சைவப்புலவர் செ.கந்தசத்தியதாசன் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்துவர். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்படும்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கேட்டுள்ளார்.