நல்லூரில் செல்லப்பா சுவாமிகளின் குருபூஜை

நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூஜை நிகழ்வு நாளை புதன்கிழமை (08.10.2025) நல்லூரில் அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

நாளை காலை-09 மணியளவில் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெறும். திருமுறை, நற்சிந்தனைப் பாடல்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சம்ஸ்கிருதத் துறைத் தலைவர் பேராசிரியர் ம.பாலகைலாசநாதக் குருக்கள் ' சத்துருஜயம் ' எனும் தலைப்பில் உரை நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து குருபூஜை வழிபாடுகளும் நடைபெறும்.