உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டுக் காங்கேசன்துறை அஞ்சல் சமூகம் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நிகழ்வு இன்று புதன்கிழமை (08.10.2025) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை காங்கேசன்துறை அஞ்சலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் உதிரம் கொடுத்து உயிர்கள் காக்க அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.