சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தத் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு பெளர்ணமி நன்னாளான இன்று வியாழக்கிழமை (04.12.2025) அதிகாலை முதல் முற்பகல்-11 மணி வரை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
திருவாசக முற்றோதல் நிகழ்வைத் தொடர்ந்து அன்னதானம் இடம்பெறும். திருவாசகம் முற்றோதல் நிகழ்வில் அனைத்து அடியவர்களையும் கலந்து கொள்ளுமாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் கேட்டுள்ளார்.

